Thursday, March 28, 2024
Home > செய்திகள் > மோடியும் யோகியும் உங்களை எவ்வளவு காலம் பாதுகாக்க முடியும்..? அசாதுதீன் ஒவைசி

மோடியும் யோகியும் உங்களை எவ்வளவு காலம் பாதுகாக்க முடியும்..? அசாதுதீன் ஒவைசி

24-12-21/10.32am

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசத்தில் நடந்த இஸ்லாமியர்கள் கூட்டமொன்றில் பேசிய அசாதுதீன் ஒவைசி காவல்துறையினர் மற்றும் இந்துக்களை மிரட்டும் வகையில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z

இஸ்லாமிய கட்சியான AIMIM ன் நிறுவனரும் எம்பியுமான ஒவைசி உ.பியில் படைத்த கூட்டத்தில் ” நான் காவல்துறையினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். யோகி என்றுமே முதலமைச்சராக நீடித்திருக்கமாட்டார். அதே போல மோடி என்றுமே பிரதமராக நீடித்திருக்கமாட்டார். மோடி எப்போது வேண்டுமானாலும் மடத்திற்கு சென்று விடலாம். இஸ்லாமியர்களாகிய நாங்கள் உங்கள் செயகைகளை மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.

`

நீங்கள் செய்த அநீதியை அல்லா மறக்க மாட்டான். உங்கள் எல்லாரையும் அழித்துவிடுவான். அப்போது உங்களை யார் காப்பாற்ற வருகிறார்கள் என இஸ்லாமியர்களாகிய நாங்கள் பார்க்கிறோம். மோடி எப்போது இமயமலைக்கு செல்வார் யோகி எப்போது மடத்திற்கு திரும்புவார் என தெரியாது. அப்போது உங்களை காப்பாற்ற யார் வருவார்கள் என நினைத்துப்பாருங்கள். நாங்கள் உங்களை மன்னிக்கமாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

```
```

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று உண்டினம் இந்து சாதுக்கள் இதே போல பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது உத்திரகாண்டில் வழக்கு பதிய வைத்த ஒவைசி தற்போது அனைத்து தரப்பு மக்களையும் மிரட்டும் தொனியில் பேசியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

…..உங்கள் பீமா