Monday, May 19, 2025
Home > செய்திகள் > புதுச்சேரி அருகே சோகம்…! திமுக எம்பியின் மகன் பரிதாப சாவு..!

புதுச்சேரி அருகே சோகம்…! திமுக எம்பியின் மகன் பரிதாப சாவு..!

10-3-22/10.10am

புதுச்சேரி : திமுக எம்பியின் மகன் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.

திமுக ராஜ்யசபா உறுப்பினராக இருப்பவர் என்.ஆர்.இளங்கோ. திமுக வழக்கறிஞராக இருந்து எம்பியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் ராகேஷ். இவர் சென்னையிலிருந்து புதுசேரிக்கு இசிஆர் சாலைவழியே சென்று கொண்டிருந்தார். இவருடன் அவரது நண்பர் ஒருவர் பயணித்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3.45 அளவில் கோட்டக்குப்பம் அருகில் உள்ள கீழ் புதுப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது கார் நிலைதடுமாறி அருகில் உள்ள டிவைடரில் மோதியது.

`

இதனால் தலைகுப்புற கார் கவிழ்ந்தது. இதில் பெரும்பாதிப்படைந்த ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துவந்து காரை அறுத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்த ராகேஷின் நண்பரை புதுச்சேரி அருகிலுள்ள PIMS மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

```
```

…… உங்கள் பீமா