15-12-21/14.58pm
வள்ளியூர் : வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல குவாரிகள் இயங்கி வருகின்றன. அதில் பல குவாரிகள் அரசியல் தொடர்புடையவர்களுக்கு சொந்தம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த ஞானதிரவியத்திற்கு சொந்தமான குவாரிகள் இயங்கிவருவதாக சொல்லப்படுகிறது. இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே நேற்று மாலை அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது அதிக அளவில் கனிமங்கள் லாரிகளில் ஏற்றிச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். பிடிபட்ட ஒன்பது லாரிகளில் ஏழு லாரிகள் திமுக எம்பியான ஞான திரவியத்துக்கு சொந்தமானது என்ற உண்மை அம்பலமானது.
அதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஞான திரவியம் எம்பி கடந்த தேர்தலின் போது பிஜேபி வேட்பாளர் ஒருவரை தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஞான திரவியம் மீது வழக்கு பதியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா