Monday, May 20, 2024
Home > செய்திகள் > கணவனை பழிதீர்க்க புது திட்டம்..! சினிமாபாணியில் சிக்கிய சிபிஎம் பிரமுகர்..!

கணவனை பழிதீர்க்க புது திட்டம்..! சினிமாபாணியில் சிக்கிய சிபிஎம் பிரமுகர்..!

26-2-22/19.20pm

கேரளா : கணவனிடம் விவாகரத்து பெற நினைத்து விவகாரத்தில் சிக்கிக் கொண்ட சிபிஎம் பெண் பஞ்சாயத்து உறுப்பினர் பற்றிய செய்திகள் கேரளாவில் தீயாய் பரவிவருகிறது.

கேரளா மாநிலம் கட்டப்பனா பகுதி வண்டன்மேடு ஊராட்சி 11ஆவது வார்டு சிபிஎம் பிரதிநிதியாக இருப்பவர் சௌமியா ஆப்ரஹாம். இவரது கணவர் சுனில் வர்கீஸ். சௌமியா வினோத் என்பவருடன் திருமணம் கடந்த உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவருடன் வாழ திட்டமிட்டிருந்தார். இதற்க்கு தடையாக இருந்த கணவரை சயனைடு வைத்து கொல்ல நினைத்ததாகவும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் திட்டத்தை கைவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் வேறு திட்டத்தை யோசித்திருக்கிறது திருமணம் கடந்த உறவை கொண்டிருந்த சிபிஎம் கும்பல். அதன்படி 45000 மதிப்பிலான எம்.டி.எம்.ஏ என்கிற போதை வஸ்துவை வாங்கி சுனிலின் பைக்கில் வைத்திருக்கிறது அந்த கும்பல். கையோடு இடுக்கி போலீசாருக்கு மர்மநபர் போல பேசி தகவல் கொடுத்திருக்கின்றனர்.

`

அதையடுத்து வண்டன்மேடு போலீசார் மற்றும் இடுக்கி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சுனிலை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சுனிலுக்கு மது அருந்தும் பழக்கமோ அல்லது புகைபிடிக்கும் பழக்கமோ இல்லையென்பது தெரியவந்துள்ளது. விசாரணை இறுகவே சிபிஎம் பிரதிநிதி யான சுனில் மனைவியை அழைத்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

```
```

கம்யூனிஸ்ட் பெண் பிரமுகரின் இந்த செயல் கேரளா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் கடந்த உறவை கைப்பிடிக்க கணவனை சிக்கவைத்த சிபிஎம் சௌமியா ஆபிரகாமுக்கு கூட்டாளியாக செயல்பட்ட ராஹியா மஞ்சில், ஷாநவாஸ், ஷெபின்ஷா, அனிமோன் மன்ஸில் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா