Friday, March 29, 2024
Home > Uncategorised > இவ்ளோ தாங்க காங்கிரஸ்..! ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

இவ்ளோ தாங்க காங்கிரஸ்..! ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

3-1-22/11.25am

பஞ்சாப் : காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப்பில் இருந்து உலக அளவில் நடந்த செஸ் போட்டிகளில் ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஊனமுற்ற பெண்ணின் கனவை காங்கிரஸ் கலைத்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் மாலிகா ஹண்டா. இவர் வாய் பேச முடியாதவர் மற்றும் காதுகேளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ல் இவருடைய ஆர்வத்தை தொடர்ந்து செஸ் விளையாட்டுப் பயிற்சியில் சேர்ந்தார். 2012 முதல் தொடர்ந்து 7முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கு காங்கிரஸ் மாநில அரசு வேலை தருவதாகவும் ரொக்கத்தொகை அளிப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் ராகுலும் பிரியங்காவும் பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள குடிசைகளை தேடி போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டதால் ஹண்டாவின் கோரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. மேலும் கடந்த மாதம் ஹண்டா வேதனையுடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அவருக்குரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

`

இந்நிலையில் கடந்த 31 டிசம்பரில் பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சரான பர்கட் சிங்கை சந்தித்துள்ளார். அப்போது காங்கிரஸ் அமைச்சர் ” கைது கேளாத வாய் பேச முடியாதோருக்கு என தனியாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அதற்க்கான வழிமுறைகள் இல்லை. உங்களுக்கு ரொக்கத்தொகையோ அல்லது அரசுப்பணியோ வழங்க முடியாது” என கைவிரித்துள்ளார்.

```
```

ஊனமுற்ற பெண்ணான ஹண்டா அதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர்மல்க தான் வாங்கிக்குவித்த பதக்கங்களை அதில் குறிப்பிட்டுள்ளார்.அந்த காணொளி பார்ப்பவர் நெஞ்சை கணக்கா வைக்கிறது. பெண்ணுரிமை அதிகாரம் பற்றி பாடம் எடுக்கும் பிரியங்கா தனது மாநிலத்தில் நடக்கும் அவலங்களை எப்போதும் பேசமாட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

….உங்கள் பீமா