Friday, May 3, 2024
Home > செய்திகள் > புர்ஹா அணிந்து வந்து பெட்ரோல் குண்டு வீச்சு..!

புர்ஹா அணிந்து வந்து பெட்ரோல் குண்டு வீச்சு..!

30-3-22/9.53AM

ஜம்மு : ஜம்முகாஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் புர்ஹா அணிந்து வந்த தீவிரவாதி ஒருவன்(ள்) பெட்ரோல் குண்டு வீசினார். இதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் நகரில் அமைந்துள்ளது சி.ஆர்.பி.எப். முகாம். இந்த முகாம் மீது பர்தா அணிந்த பயங்கரவாதி ஒருவன் பெட்ரோல் குண்டை வீசினான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்லாமிய பாரம்பரிய உடையான பர்தா அணிந்துவந்த பயங்கரவாதி ஒருவன்(ள்) தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்தான்.

`

முகாமின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றான். முகாமில் உள்ள வீரர்கள் அந்த தீயை அணைத்தனர்.இதே போல காஸ்மீர் பகுதியில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

```
```

அவனது சட்டைப்பையில் ஊடகம் ஒன்றில் பணிபுரிவதாக அடையாள அட்டை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதாக காஷ்மீர் டிஜிபி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா