24-3-22/12.12pm
தமிழ்நாடு : நேற்று முதல் இணையத்தில் திடீரென பாய்காட் ஆர்.ஆர்.ஆர் இன் கர்நாடகா என ட்ரெண்டாகிவருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள திரையரங்குளை தங்களது திரைப்பட வெளியீட்டிற்காக விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் குழு மிரட்டி வாங்கியதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியா மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும் தான் டப்பிங் படம் வெளியாவதில்லை என கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு ரசிகர்கள் கன்னட படத்தை பார்ப்பதில்லையென்றும் அவர்கள் படத்தை நாம் ஏன் பார்க்கவேண்டும் எனவும் அதிமேதாவிகள் குழு ஒன்று இணையத்தில் பதிவிட்டு வருகிறது. கன்னட மொழியில் வெளியிடாமல் தெலுங்கு மொழியில் வெளியிடுவதால் இது கன்னடர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திரை ஆர்வலர்கள் கூறுகையில் இது படத்திற்க்கான பப்ளிசிட்டி ஸ்டண்ட். இதுவும் ஒருவகை விளம்பர உத்தியே என கூறுகின்றனர்.
…..உங்கள் பீமா