Sunday, May 12, 2024
Home > அரசியல் > ஒன்மேன் ஆர்மி..? தமிழக பிஜேபியை தாங்கிப்பிடிக்கும் அண்ணாமலை..!

ஒன்மேன் ஆர்மி..? தமிழக பிஜேபியை தாங்கிப்பிடிக்கும் அண்ணாமலை..!

03-01-22

சென்னை : தமிழக ஊடகங்களின் குதர்க்கமான உள்நோக்கத்துடன் கூடிய கேள்விகளுக்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் தெளிவாக பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் திமுக ஊடகமான சன் செய்திகள் நிருபர் ஒருவர் நேற்று அண்ணாமலையிடம் குதர்க்கமாக கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார். பத்திரிக்கையாளர்களிடம் பொறுமையாகவே எப்போதும் பேசும் அண்ணாமலை ஒரு கட்டத்தில் சன் டிவி நிருபரிடம் கடுமையாக தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

எங்களுக்கு எல்லா ஊடகங்களிடமும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால் ஒருதலைப்பட்சமாக கேள்வியெழுப்புபவர்களிடம் எங்களது பதில் இப்படித்தான் இருக்கும். எப்போது தமிழக ஊடகங்கள் நேர்மையாக செயல்பட ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் எங்களது பேச்சு மாறும். நான் விவாதங்களுக்கு வர தயாராய் இருக்கிறேன். ஆனால் சரியான புள்ளிவிவரங்களுடன் நேர்மையாக கேள்வி கேட்கும் நிலை எப்போது தமிழகத்தில் நிலவுகிறதோ அப்போது வருவோம்.

`

நான் எப்போதும் அன்பாக பண்பாக பேச கூடியவன். அரசியலுக்கு வந்தபிறகே இப்படி மாறியிருக்கிறேன். பாஜாகவை மற்றும் பாரத பிரதமர் மோடியை பழிக்கவே சிலர் ஊடகங்களை நடத்துகிறார்கள். காலையிலிருந்து மாலைவரை அதை மட்டுமே செய்கிறார்கள். ஒரு மாநிலத்தலைவராய் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறுத்துப் போகமுடியாது” என நெத்தியடியாக பதிலளித்தார்.

```
```

மேலும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவரது பதிவில் இடது சாரிகள் மற்றும் திமுக ஆதரவாளர்களின் பின்னூட்டமே அதிக அளவில் காணப்படுகிறது. அவரை பின்தொடரும் பிஜேபி இணையத்தளவாசிகள் தக்க பதிலடி ஆதாரங்களுடன் கொடுக்க தவறுகிறார்கள் என நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா