5-11-21/ 7.00am
இந்தியா முழுவதும் மதமாற்றம் பெருகிக் கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மிஷனரிகள் சிறுவர் சிறுமியை கூட மூளைச்சலவை செய்து மதமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
கேரளா திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தலித் இளைஞரான மிதுன் கிருஷ்ணா. இவர் கிறித்தவ இனத்தை சேர்ந்த தீப்தி என்பவரை கடந்த அக்டோபர் 29 அன்று திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த இருநாட்களில் மிதுனை கிறித்தவத்திற்கு மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர் மறுக்கவே தீப்தியின் சகோதரர் மதம் மாற மறுப்பதாக கூறி மிதுனை தங்கியிருக்கிறார். தீப்தியின் சகோதரர் ஒரு மருத்துவரும் கூட. மிதுன் மீதான தாக்குதல் சிசிடிவியில் பதிவானது. அது இணையத்தில் வைரலாகவே இந்த பிரச்சினை வெளியே தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மருத்துவர் தீப்தியின் கணவர் மிதுன் கிருஷ்ணாவை சிராயின்கீழு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அங்கு மிதுனை மதம் மாற கட்டாயப்படுத்த அவர் மறுக்க அதன் பின்னர் மருத்துவர் தலித் இளைஞரை கடுமையாக தங்கியிருக்கிறார்.
சிராயின்கீழுகாவல்துறை SC/ST சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. தாக்கிய தீப்தியின் சகோதரர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும்பணி தீவிரமாக நடக்கிறது. தாக்கப்பட்ட மிதுன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
…….உங்கள் பீமா
#dalit #conversion #attack #trivandrum