Monday, May 20, 2024
Home > செய்திகள் > மிரட்டிய மௌலானா..! ஷாக் கொடுத்த யோகி ஆதித்யநாத்

மிரட்டிய மௌலானா..! ஷாக் கொடுத்த யோகி ஆதித்யநாத்

23-4-22/6.42AM

உத்திரபிரதேசம் : டெல்லி ஜஹாங்கிர்ப்பூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களையும் கடைகளையும் நகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. இதற்க்கு தடைகோரிய இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தது. தலைமை நீதிபதி ரமணா அமர்வு மனு கொடுத்த ஒரே மணிநேரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே உத்திரபிரதேச இஸ்லாமிய மதகுரு மௌலானா தாக்கிர் ராசா கூறுகையில் ” சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பை அகற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி இதுபோன்ற செயல்களை உடனடியாக நிறுத்தவேண்டும். இன்னும் பத்தே நாட்களில் நோன்பு முடிந்துவிடும். அதன்பின்னர் நாங்கள் யார் என தெரியும். மஹாபாரத யுத்தம் தொடங்கும்.

முஸ்லிம்கள் தெருவில் இறங்கி போராடுவதை யாராலும் தடுக்கமுடியாது. அல்லாவின் விருப்பத்திற்கு இணங்க சிறைநிரப்பும் போராட்டம் இந்தியா முழுவதும் நடக்கும். நாங்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். பாகிஸ்தான் எங்களை ஏற்றுக்கொள்ளாது. பங்களாதேஷ் சீனாவும் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் எங்களுடன் வாழ முடியாது என்பதற்காக நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது ” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

`

இஸ்லாமிய மதகுரு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சில மணிநேரங்களிலேயே மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார். சிறையில் கைதிகள் அதிகமாவதால் புதிதாக சிறைகளை எழுப்ப உத்தரவிட்டார். மேலும் நவீன தொழில்நுட்பங்களை சிறையில் செயல்படுத்த வலியுறுத்தினார்.

```
```

அம்ரோஹா ,சம்பல் , ஷாம்லி, அமேதி, ஹாத்ராஸ், முஜாபார்நகர் போன்ற இடங்களில் புதிதாக சிறைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பாவிகளும் சிறைசெல்லநேர்வதால் அங்கு தொழில்முனைவோர் கருத்தரங்கு மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்குவது குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக வகுப்புகளும் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

…..உங்கள் பீமா