Monday, May 20, 2024
Home > செய்திகள் > இதையெல்லாம் மசூதின்னு சொல்லாதீங்க..! உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

இதையெல்லாம் மசூதின்னு சொல்லாதீங்க..! உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

3-5-22/17.32pm

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சுரங்கம் அமைக்க ஜிண்டால் நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து மசூதி நிர்வாகம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

நிர்வாகம் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு சென்றது. அந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது. ராஜஸ்தான் மாநிலம் புர் கிராமத்தில் உள்ள திரங்கா மலையில் சுரங்கம் தோண்ட ஜிண்டால் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அஞ்சுமன் கமிட்டி ஜிண்டால் நிறுவனத்தை பணிசெய்யவிடாமல் போராட்டம் நடத்தியதாக தெரிகிறது.

மேலும் அஞ்சுமன் கமிட்டி தரப்பில் திரங்கா மசூதியில் உள்ள கலந்தாரி பகுதியில் சுவர் மற்றும் தொழுகை மேடை உள்ளது. அதை இடிக்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு அழைக்கப்பட்டது. ஜிண்டால் சார்பில் சுரங்கம் தோண்டுவதாக கூறப்படும் பகுதியில் அமைந்திருக்கும்ம் சுவர் போன்ற அமைப்பு மசூதியா இல்லையா என கண்டறிய ஒரு குழு அமைக்க உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தது.

`

2021ல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜிண்டால் சா நிறுவனத்துக்கு சுரங்கம் அமைக்க ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற்நீதிபதிகள் ஹிந் குப்தா மற்றும் வி.சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில் ” தொழுகை அல்லது தொழுகை நடத்தும் நோக்கத்திற்காக இடிந்து விழப்போகும் பாழடைந்த சுவரை மசூதி என்றோ அல்லது புனித ஸ்தலம் என்ற அந்தஸ்தோ வழங்கமுடியாது.

```
```

ஏனெனில் இந்த கட்டிடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டதாக எந்த காலகட்டத்திலும் எவ்வித ஆதாரமும் இல்லை. பயன்படுத்தப்பட்டற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாதநிலையில் ஒரு பாழடைந்த சுவர் அல்லது ஒரு மேடையை தொழுகை செய்யும் நோக்கத்திற்கான ஒரு மத வழிபாட்டுத்தலமாக அங்கீகரிக்கவோ அந்தஸ்து வழங்கவோ முடியாது.

கட்டிடம் கூரையின்றி செடிகள் வளர்ந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என உச்சநீதிமன்ற்நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 2010 முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜிண்டால் சா அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

…..உங்கள் பீமா