Sunday, May 19, 2024
Home > செய்திகள் > மசூதியில் ஒலிபெருக்கியை அகற்றுங்கள்..! அல்லது ஹனுமான் சாலிசா ஒலிபரப்புங்கள்..!

மசூதியில் ஒலிபெருக்கியை அகற்றுங்கள்..! அல்லது ஹனுமான் சாலிசா ஒலிபரப்புங்கள்..!

3-4-22/9.12AM

மஹாராஷ்டிரா : மறைந்த பால்தாக்கரேவின் மருமகனும் மகாராஷ்டிரா நிர்மாண் சேனா நிறுவனருமான ராஜ்தாக்கரே நேற்று நடந்த கூட்டத்தில் மஹாராஷ்டிரா அரசை கடுமையாக எச்சரித்தார். மேலும் இஸ்லாமியர்களை வாக்குவங்கியாக பயன்படுத்துவதாக விமர்சித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது “உத்திரபிரதேசத்தின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல மஹாராஷ்டிராவும் வளர்ச்சியடைய வேண்டும். நான் அயோத்தி செல்லுகிறேன். இப்போது என கூறமுடியாது. நான் ஹிந்துத்வாவை பற்றியும் பேசுவேன். ஷரத்பவார் மாநிலத்தில் சாதி பாகுபடை வளர்த்துவிட்டார்.

மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தியுள்ளார். ஜாதிகளை களைந்தெரியாமல் நாம் எப்படி ஒரு ஹிந்துவாக இருக்கமுடியும். நான் தொழுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மஹாராஷ்டிரா அரசு மசூதி ஒலிபெருக்கி விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவற்றை நீக்கவேண்டும். நான் கடுமையாக எச்சரிக்கிறேன். மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை நீக்குங்கள்.

`

அல்லது ஒலிபெருக்கிகளை மசூதி வாசலில் வைத்து ஹனுமான் சாலிசா ஒலிபரப்புங்கள். நான் பிரதமர் மோடியிடம் கோரிக்கையெழுப்புகிறேன். மதரஸாக்களில் உள்ள இருப்பிடங்களில் சோதனை நடத்துங்கள். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கே வசிக்கிறார்கள். மும்பை காவல்துறைக்கும் அது தெரியும். நம் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறார்கள். அவர்களிடம் ஆதார் அட்டை கிடையாது.

```
```

நமது எம்.எல்.ஏக்கள் அவர்களுக்கு அடையாள அட்டையை உருவாக்கி தருகிறார்கள்” என குறிப்பிட்டார். இவரது பேச்சுக்கள் ஒருசேர ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுவருகிறது,

…..உங்கள் பீமா