Monday, May 20, 2024
Home > செய்திகள் > காஞ்சிபுரத்தில் பரபரப்பு..! கோவிலில் கைகலப்பு

காஞ்சிபுரத்தில் பரபரப்பு..! கோவிலில் கைகலப்பு

19-4-22/12.26PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருபிரிவினருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்கோவிலில் சித்ராபௌர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.பின்னர் இரவு செவிலிமேடு பாலாற்றுப்படுகையில் வரதராஜப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர். இரண்டுவருடம் கழித்து இப்போது தான் பொதுமக்களுக்கு திருவிழா நிகழ்ச்சியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

`

இந்த நிகழ்ச்சியில் நடந்த இந்த கலவரத்தால் அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முகம்சுளித்தனர். இதுகுறித்துப்பேசிய பக்தர் ஒருவர் “ஒவ்வொரு பெரிய திருவிழாவின்போதும் இத்தகைய விரும்பத்தகாத செயல் நடைபெறுகிறது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு சுமூகமான தீர்வை காணவேண்டும்” என தெரிவித்தார்.

```
```

….உங்கள் பீமா

pls follow us on google newshttps://news.google.com/publications/CAAqBwgKMP78qAsw8IfBAw?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen