Monday, May 20, 2024
Home > செய்திகள் > நாட்டுக்கு சேவை செய்ய இந்திய கடற்படை அழைப்பு..! இதோ விவரங்கள்..!

நாட்டுக்கு சேவை செய்ய இந்திய கடற்படை அழைப்பு..! இதோ விவரங்கள்..!

10-3-22/11.03AM

சென்னை : இந்திய கடற்படை 153 காலியிடங்களுக்கான அழைப்பை வெளியிட்டுள்ளது. ஆண் பெண் இருபாலினத்தவருக்கும் இதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எக்சிகியூடிவ் பணிக்கான தேவை 40 (38+2). இவர்களுக்கு வருடாந்திர ஊதியம் தோராயமாக வருடத்திற்கு 17.8 லட்சம். ஏர் டிராபிக் கண்ட்ரோலர் பதவிக்கு 6 காலியிடங்கள். இவர்களுக்கு தோராயமாக வருடாந்திர ஊதியம் 8,000,00.

அப்செர்வர் பதிவுக்கான காலியிடங்கள் 8 (ஆண்கள் மட்டும்). இந்த பதவிக்கான வருடாந்திர ஊதியம் 2.5 லட்சங்கள் தோராயமாக. லாஜிஸ்டிக் பதவிக்கான காலியிடங்கள் 18 (ஆண்கள் மட்டும்). இவர்களுக்கான வருடாந்திர ஊதியம் தோராயமாக 17.6 லட்சம்.

`

பைலட் பதவிக்கான காலியிடங்கள் 15 (ஆண்கள் மட்டும்). இந்த பதவிக்கான ஊதியம் தோராயமாக வருடத்திற்கு 16.2 முதல் 20.7 லட்சங்கள். என்ஜினீயர் பதவிக்கான காலியிடங்கள் (பொதுசேவை) 15 (ஆண்கள் மட்டும்) இந்த பணிக்கான ஊதியம் தோராயமாக வருடத்திற்கு 8.3 லட்சம்.

எலெக்ட்ரிக்கல் பதவிக்கான காலியிடங்கள் 30(ஆண்கள் மட்டும்). இந்த பணிக்கான வருடாந்திர ஊதியம் தோராயமாக 10.7 லட்சம். கல்விப்பிரிவிற்கான காலியிடங்கள் 17(இருபாலினத்தவரும்).

மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பத்தை பெற கடைசிநாள் 12-மார்ச்-2022. விண்ணப்பத்தை பெற கீழ்கண்ட லிங்கில் செல்லவும். (EMPLOYMENT டேட்டட் 26-2-22)

```
```

www.joinindiannavy.gov.in

….உங்கள் பீமா