Monday, May 20, 2024
Home > செய்திகள் > விட்டுவைக்காத கட்டாய மதமாற்றம்..! பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!

விட்டுவைக்காத கட்டாய மதமாற்றம்..! பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!

 

love jihad

மத்தியபிரதேசம் : உலகில் எந்த நாடுகளும் குறிப்பாக ஐரோப்பிய ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டங்கள் அதிலும் சீனா ரஷ்யா உட்பட பலநாடுகள் சந்திக்காத கட்டாய மதமாற்றத்தை இந்தியா சந்தித்துவருவதாகவும் அதனால் இந்திய மக்கள் பெரும் பாதிப்படைந்து வருவதாகவும் நடுநிலையாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.


`

இந்நிலையில் மத்தியபிரதேசம் அசோகா நகர் பகுதியில் மருத்துவமனை நடத்திவரும் கான் என்பவர் தான் ஒரு ஹிந்து என கூறி அறிமுகமாகி பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவருடன் பழகியிருக்கிறார். பின்னர் அந்த பெண் மருத்துவருடன் கட்டாய உறவு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை மதம் மாறச்சொல்லி வற்புறுத்தவே விஷயம் காவல்துறை காதுகளுக்கு போயிருக்கிறது.

```
```

பாதிக்கப்பட்ட பெண் அசோகா நகர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அந்த புகாரில் 2018ல் தனக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்து ஆனதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் கானை சந்தித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பின்னர் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நிஹால் கான் மீது மாநில மத சுதந்திர சட்டப்பிரிவு மற்றும் கற்பழிப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடையாளத்தை மாற்றி கூறியதற்கு மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்ததையறிந்த நிஹால் கான் தப்பித்து ஓடியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி வருகின்றனர்.