Sunday, May 12, 2024
Home > செய்திகள் > யார் இந்த அன்னபூரணி அரசு அம்மா..? பெண் சாமியாரின் திடுக்கிடும் முழுப்பின்னணி

யார் இந்த அன்னபூரணி அரசு அம்மா..? பெண் சாமியாரின் திடுக்கிடும் முழுப்பின்னணி

26-12-21/12.26pm

செங்கல்பட்டு : அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து இயங்கிவருகிறது.

சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. 2014ல் சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளகாதலனான அரசு என்பவனுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

`

அதன்பின்னர் மர்மமான முறையில் அரசு இறந்துவிடவே சிலகாலம் யார்கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்த அன்னபூரணி தற்போது ஆதிபராசக்தியின் மறு உருவம் என அழைக்கப்பட்டு சாமியாராக வளம் வருகிறார். முகம் முழுக்க பேசியல் ஐ ப்ரோ த்ரெட்னிங் என பக்காவாக அலங்கரித்து கழுத்தில் பல மாலைகள் அணிந்து புடை சூழ வருகிறார். மேலும் செங்கல்பட்டு பகுதி மக்களை ஆசிர்வாதம் வாங்க வேறு வரச்சொல்கிறார்.

```
```
https://twitter.com/Boopath38482603/status/1474975142799233025?s=20

அன்னபூரணி அரசு அம்மா என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் வேறு நடத்துகிறார். அரசால் அங்கீகாரம் பெற்றதா இதுவரை யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளார்கள். அரசுக்கு என்ன ஆனது. தனது காதலனின் உருவ சிலையை வடிவமைத்து சாமியார்போல நடிப்பது ஏன் என பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இவர் போன்ற புல்லுருவிகளால் சனாதன தர்மத்தின் மாண்பு குலைகிறது என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா