Monday, May 20, 2024
Home > செய்திகள் > பிஜேபி உறுப்பினர் படுகொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!

பிஜேபி உறுப்பினர் படுகொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!

26-2-22/18.10pm

ராஜஸ்தான் : நேற்று வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிஜேபி உறுப்பினர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கோட்டா கைதுணிபோல் பகுதியில் அமைந்துள்ளது சபர்மதி காலனி. இங்கு குடும்பத்துடன் வசிப்பவர் விக்கி ஆர்யா. இவர் பாரதிய யுவ மோர்ச்சாவில் உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று ஆர்யா தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த கும்பல் அவரை வழிமறித்தது. நிலைமையை உணர்ந்த விக்கி ஆர்யா சுதாரித்துக்கொண்டு பைக்கில் இருந்து இறங்கி ஓடினார்.

அவரை பின்னல் விரட்டி சென்ற அந்த கும்பல் இரும்புக்கம்பியை கொண்டு பலமாக அவரின் தலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது. வெறி தீராத அந்த கும்பல் கையில் வைத்திருந்த கம்பிகள் இரும்பு பைப்புகள் கொண்டு பலமாக தாக்க அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது. சம்பவம் விக்கி ஆர்யாவின் வீட்டின் அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.

`

தகவலறிந்து வந்த அவரது குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்விழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து இருவரை கைது செய்துள்ளனர். இந்தவழக்கில் பன்வாரி, அர்ஜுன், நிகில், ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

```
```

நிகில் மற்றும் ராஜ் ஆகியோரை போலீசார் கைதுசெய்துள்ளனர். தலைமறைவான கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆர்யாவை கொன்றது உறவினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

…….உங்கள் பீமா