Wednesday, January 28, 2026
Home > அரசியல் > சட்டசபை போல மேடை..!மாஸ் காட்டிய அண்ணாமலை..!

சட்டசபை போல மேடை..!மாஸ் காட்டிய அண்ணாமலை..!

பொள்ளாச்சி : தமிழக பிஜேபி தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை பதவியேற்றபின்னர் அவரின் பேச்சுக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழக இளைஞர்கள் பிஜேபியில் இணைந்துவருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் நேற்று நடந்த கூட்டத்தில் மாநில பிஜேபி தலைவர் பொதுமக்களிடையே உரையாற்றினார். பொள்ளாச்சியே ஸ்தம்பித்துபோகும் அளவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டது ஆளும்கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.




மத்திய மோடி அரசின் எட்டாண்டுகால சாதனைகளை விளக்க பொள்ளாச்சியில் நேற்று தமிழக பிஜேபி மாநாடு நடத்தியது. 2026 தமிழக சட்டசபையை கைப்பற்றும் என அர்த்தம் தொனிக்கும் வகையில் தமிழக சட்டசபை போன்று மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பேசிய மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ” பாரதபிரதமர் மோடியின் இந்த எட்டாண்டு கால ஆட்சியில் வீடில்லாத 11கோடிபேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர், கழிப்பிடம் என அத்தியாவசிய தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 6600 மருத்துவ பணியிடங்களை உருவாக்கியிருக்கிறோம். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 36 லட்சம்பேருக்கும் மேலானவர்களுக்கு சிறுகுறு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

பிஜேபி ஆட்சியில் தான் தென்னை நார் வாரியம் பொள்ளாச்சியில் துவங்கப்பட்டது. 1200கோடி இருந்த தென்னை நார்ப்பொருட்கள் வர்த்தகத்தை 3900 கோடியாக உயர்த்தியுள்ளோம். பொள்ளாச்சியில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க ஆனைமலையாறு நள்ளாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். கூட்டு பாலியல் பலாத்காரம் கருமுட்டை விற்பனை என குற்றங்கள் புதுவிதமாக நடைபெறும் வேளையில் உத்திரபிரதேசம் வரை ஸ்டாலின் அலை வீசுகிறது என காமெடி செய்து வருகின்றனர்.

இந்தியாவின் துணைப்பிரதமர் ஆகலாம் என கனவில் இருக்கின்றனர். நீட் தேர்வுக்கெதிராக ஒன்றுகூட பலமாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். பத்துமாதங்கள் ஆகியும் ஒரு முதல்வரும் பதில்கடிதம் அனுப்பவில்லை. தேனியில் பூவிற்பனை செய்த மாணவி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். திமுகவை தவிர யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.



பொள்ளாச்சி பகுதியில் இருந்து ஒருநாளைக்கு 7000 லோடு மண் கேரளாவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தால் கடத்தப்படுகிறது. ஆனால் கேரளாவிலோ மண்ணை அள்ள மாநில அரசு தடைவிதித்துள்ளது. கனிமவளங்களை கொள்ளையடிப்பதை தடுக்க பிஜேபி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும். கேரளாவுக்கு கொண்டுசெல்லபப்டும் ஒவ்வொரு மணல் வாகனமும் சிறைபிடிக்கப்படும்.

இல்லமத்தேடி கல்வி போன்ற திட்டங்களை மத்திய பிஜேபி அரசு துவங்கியதோடு 800 கோடிகள் நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து புதுப்பெயர் சூட்டுவதில் திமுக மிகச்சிறந்து விளங்குகிறது” என மாநில தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சி கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றினார்.