23-4-22/11.10AM
உத்திரப்பிரதேசம் : உத்திரபிரதேசம் புலந்த்சாகர் பகுதியில் வசிக்கும் ஜாஹிர் அலி என்பவர் மீது காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி நாம் இருவர் நமக்கு இருவர் என்ற அரசின் வசனங்களெல்லாம் அப்பாவி பெரும்பான்மையினருக்கு தானா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜாஹிர் அலிக்கு 9 மகள்கள். அதில் மூன்றுபேர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தந்தை மீதும் அவரது நண்பர்கள் மீதும் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும் அதில் ஒரு பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் தந்தை கொலை ஆயுதத்தை வைத்து மிரட்டும் வீடியோவையும் வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சச்சின் குப்தா என்பவர் தனது சமூக வலைதளத்தில் ” 45 வயதான ஜாஹிர் அலிக்கு 9 மகள்கள் உள்ளனர். இன்று மூன்று மகள்கள் மாவட்ட எஸ்.எஸ்.பியிடம் புகாரளித்துள்ளனர். தங்களது தந்தை மகள்கள் என்று கூட பாராமல் 9பேர் மீதும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார் என்றும், தங்களது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தன்னுடன் படுக்க கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டீவீட்டுக்கு பதிலளித்த புலந்த்சாகர் காவல்துறை தந்தை மீது மகள்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து உடனடி சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் குற்றம்சுமத்தப்பட்டவர் கைது செய்யயப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
….உங்கள் பீமா
