திவ்யா 2002 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் என்ற பகுதியில் இலங்கன்விளை என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரின் தந்தை சத்யராஜ், இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இவர் சத்யராஜின் இரண்டாவது மகள்.இவர் தனது பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்தார்.பின்னர் திவ்யா தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்ல இருந்தார்.
திவ்யா அதே கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சித் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.ரஞ்சித் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.ரஞ்சித் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். திவ்யா தனது கல்லூரி படிப்பை இணையம் என்ற ஊரில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.திவ்யா கல்லூரியில் படிக்கும் போதே அந்த பகுதியை சேர்ந்த ஷெர்லின் புரூஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதல் கதையை அறிந்த ரஞ்சித் திவ்யாவுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இதனால் திவ்யா மன வேதனையில் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.இந்நிலையில் ரஞ்சித் திவ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த திவ்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் இலங்கன்விளையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதை அறிந்த புரூஸ் திவ்யாவிடம் ரஞ்சித்தை பார்க்க வீட்டிற்கு சென்றாயா என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த திவ்யா தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற் கொ லை செய்து கொண்டார்.
திவ்யாவின் பெற்றோர் போலீசில்புகார் கொடுத்துள்ளனர்.
இதை அறிந்த போலீசார் திவ்யாவின் வீட்டிற்கு சென்று திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் திவ்யாவின் காதலன் ஷெர்லின் புரூஸை கைது செய்துள்ளனர் மற்றும் திவ்யாவுக்கு டார்ச்சர் கொடுத்த ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.