Thursday, March 28, 2024
Home > Cinema > அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் !! கண்டிப்பாக சொன்ன சில்க் ஸ்மிதா !! காரணம் என்ன?

அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் !! கண்டிப்பாக சொன்ன சில்க் ஸ்மிதா !! காரணம் என்ன?

நடிகை சில்க் ஸ்மிதா இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை 80,90 களிள் கனவு கன்னியாக வலம் வந்தவர். என்ன தான் இவர் உயிரிழந்து 25 வருடங்கள் ஆனாலும் சில்க் ஸ்மிதா என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் தெரியும்.

17 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்த சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்துள்ளார். முதல் முதலில் சினிமாவில் டச் அப் பெண்ணாக வந்த இவர். 1979 ஆம் ஆண்டு துவங்கி பல படங்களில் நடித்தார்.

1980 ஆம் ஆண்டு வெளியான வண்டி சக்கரம் என்ற படத்தில் பாரில் நடனமாடும் பெண்ணாக சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் பெற்ற வெற்றி இவரை சில்க் ஸ்மிதா என்றே பலரும் அழைக்க துவங்கினர்.

`

பல வெற்றிகளை தொடர்ந்து பெற்று உச்சத்தில் இருந்த இவர் கோவகாரர்ராகவும் , நேரத்தை கடைப்டிபவர்காவும் இருந்துள்ளார். ஷூட்டிங் முடிந்து 10 நிமிடம் மட்டுமே செட்டில் இருப்பாராம். அதன் பின் ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பி விடுவாராம்.

```
```

சத்தியராஜ் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’. இந்த படத்தில் சத்தியராஜுடன் நீங்கள் நடிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சொல்ல உடனே மறுத்த சில்க் ஸ்மிதா ‘அவருடன் நான் நடிக்க மாட்டேன். அவர் முகத்தை பாருங்கள்.. உயரத்தை பாருங்கள். அவருடனெல்லாம் நான் நடிக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டாராம்.

அதன்பின் சத்தியராஜின் குடும்ப பின்னணி உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியே அந்த இயக்குனர் சில்க் ஸ்மிதாவை சம்மதிக்க வைத்துள்ளார். படப்பிடிப்பில் சத்தியராஜ் பேசும் விதம் எல்லாம் சில்க் ஸ்மிதாவுக்கு பிடித்துப்போக அதன்பின் பல படங்களில் அவர் சத்தியராஜுடன் நடித்தார். இதில் ‘ஜீவா’ முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.