10-2-22/8.30am
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பிஜேபி தலைமை மும்முரமாக இயங்கிவருகிறது.தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை கமலாலயத்தில் எறிந்தனர்.
சென்னையில் தமிழக பிஜேபியின் தலைமையகமான கமலாலயம் திநகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, மூன்று குண்டுகள் வீசப்பட்டதாக தெரிகிறது. மூன்று குண்டுகள் அலுவலக வளாகத்திற்குள் விழுந்தது. மர்மநபர்கள் சிலர் இருசக்கரவாகனத்தில் வந்து இந்த செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
நள்ளிரவு ஆதலால் அலுவலக கதவுகள் மூடப்பட்டிருந்தது. அதனால் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவஇடத்திற்கு விரைந்தனர். துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதனிடையே சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை அடையாளம் கண்டனர். அவர் சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த கர்த்தா வினோத் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பிஜேபி தலைவர்களுக்கு சமூக வலைதளத்தில் கொலைமிரட்டல் விடுப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஜேபி தலைவரான எஸ்.ஆர்.சேகர் என்பவருக்கு ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்தது நினைவுகூரத்தக்கது.
மேலும் நாராயணன் திருப்பதி அவர்களை வீடுபுகுந்து வெட்டுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது. தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக இல்லாமல் குற்றவாளிகளை முறையாக விசாரிக்கவேண்டும் என பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
….உங்கள் பீமா