Friday, May 3, 2024
Home > செய்திகள் > முதல்வர் யோகியின் வெற்றி ரகசியம்..! மோகன் சி லாசரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

முதல்வர் யோகியின் வெற்றி ரகசியம்..! மோகன் சி லாசரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

12-3-22/10.12am

சென்னை : நடந்துமுடிந்த ஐந்துமாநில தேர்தலில் பிஜேபி நான்குமாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியை பாராட்ட தமிழக முதல்வருக்கு மனதில்லை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தில் பெற்ற வெற்றியின் பின்னணியில் கர்த்தர் ஒளிந்திருக்கிறார் என்ற திடுக்கிடும் பின்னணியை கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் வெளியிட்டுள்ளார். அதில் ” அவர்கள் நினைக்கிறார்கள் தனிப்பெரும்பான்மையாக வந்துவிட்டோம் என்று. ஆனால் அவரை முதல்வராக்கியது கர்த்தரே. நீங்கள் வரவில்லை. கர்த்தர் வரவைத்திருக்கிறார்.

`

ஒரு சாமியாரை 7முதல்வராகியிருக்கிறார் கர்த்தர். ஏன் வரவைத்தார் தெரியுமா. பிஜேபி இனிதான் ஆட்டம் காணப்போகிறது. அவர்தான் இனி மோடிக்கு எதிராக இருக்கப்போகிறார். கர்த்தர் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டைமூட்டிவிடுவார். அது தேவனாலே உண்டாயிற்று என வெகுவிரைவில் இந்தியா அறிந்துகொள்ளும். நம் ஜெபத்தை தாண்டி இந்தியாவிற்குள் எதுவும் நடக்காது” என பேசியுள்ளார்.

```
```

மோகன் சி லாசரசுக்கு தெரியாமல் இந்தியாவிற்குள் எதுவும் நடக்காது என்பதனால் தேசிய புலனாய்வு முகமை இவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் முடிந்தால் ரா உளவாளிகள் மூலம் வேவுபார்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா