Monday, May 20, 2024
Home > News > இன்ஸ்டாகிராம் காதல்!! 16 வயது சிறுமியை நண்பர்களுக்கு .. !! முபாரக் அலி!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி முழு விவரம்

இன்ஸ்டாகிராம் காதல்!! 16 வயது சிறுமியை நண்பர்களுக்கு .. !! முபாரக் அலி!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி முழு விவரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடும் வாடிக்கையாக வைத்துள்ளார் அவர்.

அப்போது தான் இன்ஸ்டாகிராமில் பெங்களூரில் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரியும் 32 வயதான முபாரக் அலி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து இளம் பெண்ணிடம் பேசிவந்த முபாரக் அந்த பெண்ணிற்கு ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்தியுள்ளர்.

`

தொடர்ந்து அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியும் உள்ளார். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதை கூட அறியாத அந்த சிறுமியை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளர் முபாரக்.

பின்னர் புதுக்கோட்டை வந்த முபாரக் அலி அந்த இளம் பெண்ணிடம் வீட்டை விட்டு வரும்படியும் . நாம் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் . அதை நம்பி அவனுடன் சென்றுள்ளார் அந்த சிறுமி

```
```

பெங்களூரு அழைத்து சென்ற முபாரக் அலி அங்கு ஒரு விடுதியில் அந்த சிறுமியை அடைத்து வைத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வேலூரில் உள்ள தனது நண்பர்களான ரியாஸ் , சதாம் உசேன் ஆகியோரை அழைத்து 3 நாட்க்கள் அந்த சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து மூவரும் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்கிடையில் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற மகளை காணவில்லை என அந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே வேகமாக செயல்பட்ட காவல்துறை சிறுமியை செல் போன் தொடர்பை வைத்து டிராக் செய்து சிறுமி பெங்களூரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனே அங்கு விரைந்த காவல்துறை. சிறுமியை அந்த கயவர்களிடம் இருந்து மீட்டதுடன் . முபாரக் அலி , ரியாஸ், சதாம் உசேன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து . திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி மாயம் என்று ஆரம்பத்தில் பதிந்த வழக்கை இப்போது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை , போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றியுள்ளனர்.