Monday, May 20, 2024
Home > செய்திகள் > திருப்பத்தூர் அருகே கோரவிபத்து..! சிறுமிகள் உட்பட 11பேர் பலி..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

திருப்பத்தூர் அருகே கோரவிபத்து..! சிறுமிகள் உட்பட 11பேர் பலி..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

2-4-22/17.11PM

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை மதுரா புலியூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் நேற்று கொடூர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 30 பேர் கொண்ட குழு சேப்பரை கிராமத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க நேற்று காலை 9 மணிக்கு மஹிந்திரா பொலீரோ வாகனத்தில் சென்றனர். வாகனம் மயிலம்பாறை எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலுள்ள ஐம்பது அடிக்கும் மேலான பள்ளத்தில் பலமுறை உருண்டு கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 11 பெண்கள் பலியாகினர். 10 ஆண்கள் 12பெண்கள் படுகாயமடைந்தனர். சம்பவத்தையறிந்த தீயணைப்புத்துறையினர் இரண்டுகிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

எந்தவொரு வாகனமும் உள்ளே செல்லமுடியாமல் மண்பாதையாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

`

துரகா 40, அவரது மகள்கள் பவித்ரா 18,சர்மிளா 12, செலவி 35, சுஹிந்திரா 55, மங்கை 60, சின்னம்மை 12, அலமேலு 12, சன்னதிக்கு 22,திக்கியம்மாள் 47, ஜெயப்ரியா 16 ஆகியோர் மரணமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றதால் வாகனம் ஒருபக்கமாக சாய்ந்தவாறே சென்றுள்ளது.

```
```

சேப்பாறை பகுதியில் சென்றபோது குறுக்கே வந்த நாயை மோதாமல் இருக்க ட்ரைவர் பிரேக் பிடிக்க முயன்றிருக்கிறார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமான ட்ரைவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

…..உங்கள் பீமா

#javvathumalai #thirupathur #accident #11dead