20-3-22/9.43am
சென்னை : ஏபிவிபி முன்னாள் தமிழக நிர்வாகியாக இருந்தவர் சுப்பையா. இவர் ஒரு மருத்துவரும் கூட. இவர்மீது 2020ல் தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று கைதாகியுள்ளார். இவர் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்தில் நீதிகேட்டு போராடி சிறைக்கு சென்ற ஏபிவிபி நிர்வாகிகளை சிறையில் சந்தித்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த 2020ல் ஒரு மூதாட்டி வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் சுப்பையா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
விசாரணையில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்த மருத்துவர் சுப்பையாவுக்கும் மேல்தளத்தில் இருந்த ஒரு மூதாட்டிக்கும் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்துவந்துள்ளது. அதன்காரணமாக இந்த செயலில் சுப்பையா ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
அதன் பின்னர் லாவண்யா வழக்கில் கைதான ஏபிவிபி உறுப்பினர்களை சிறையில் சென்று சந்தித்த சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னரே கைதுப்படலம் தொடங்கியதாக மருத்துவரின் நட்புவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை வருகிற மார்ச் 31வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
…..உங்கள் பீமா