ஸ்டுடியோ கிரீன் (Studio Green) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சில்லுனு ஒரு காதல் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் ஞானவேல் ராஜா.
இப்படத்தினை தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ், இன்று நேற்று நாளை, கொம்பன், டார்லிங் 2, மிஸ்டர் லோக்கல், பத்துதலபோன்ற மிகப்பெரிய படங்களில் தயாரித்து பிரபலமானார். மாஸ் படங்களை தாண்டி இறைவி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் தங்கலான், கங்குவா படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பருத்திவீரன் படத்தில் இயக்குனர் அமீர் செய்த அயோக்கியத்தனத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார் ஞானவேல் ராஜா.
2 கோடி பட்ஜெட்டில் எடுத்த பருத்திவீரன் படத்தின் கணக்கை தயாரிப்பாளர் சங்கம் கேட்டனர். அந்த கணக்கை காட்டும் விசயத்தை போலி கணக்கை எழுதி கொடுத்தார். உண்மையாக ஆன செலவை விட பல மடங்கு அதிகமாக செலவு காட்டுவார் அமீர்
திருடுவது தான் அவருக்கு வேலை உழைக்கிறதுலாம் கிடையாது. என்கிட்ட மட்டும் திருடுனது இல்லை, பல தயாரிப்பாளரிடம் திருடி இருக்கிறார் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.
பருத்தி வீரன்ல அமீர் பண்ண முழு அய்யோக்கியத்தனத்தையும் கிழிச்சு தொங்கவிட்டுட்டாரு ஞானவேல்.(அவன் வலி அவனுக்கு)
— Satheesh (@Satheesh_2017) November 20, 2023
அமீரோட இத்தனை வருஷ யோக்கியன் வேஷம்லாம் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துட்டாரு
ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு வெளிப்படையா தாக்கி பேசுறதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் 🙄😷 pic.twitter.com/foUfqhpG3I
The above Video of Producer Gnanavel Raja clearly tell the issue of Gnanavel Raja with Director Amir . Please watch the above video of Gnanavel Raja Latest Interview
