இந்திய டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான சோயிப் மாலிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அப்போது மாலிக் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார். அதனால் சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து துபாயில் இருவரும் வசித்து வந்தனர். இருவரும் தொடர்ந்து தங்கள் நாட்டுக்காக விளையாடினர். அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சானியா மாலிக் உறவு சுமூகமாக இல்லை என்று சொல்லப்பட்டது. அதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் மாலிக் திடீரென மூன்றாவதாக சனா ஜாவேத் என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், நடிகர் சனா ஜாவேத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த ஒரு நாள் கழித்து, சானியா மிர்சாவின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் சோயப் மாலிக்கும் பிரிந்ததை உறுதிப்படுத்தினர்.
இது சம்மந்தமாக சானியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் “சானியா எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளிக்கு வராமல் பார்த்துக் கொள்வார். ஆனால் இப்போது சானியா சோயப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டதை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் மாலிக்கின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என விரும்புகிறார். இந்த நேரத்தில் அவரின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரின் தனிமைக்கு மதிப்பளித்து அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்துள்ள சனா பாகிஸ்தானில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.