Friday, May 3, 2024
Home > Cinema > ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனரை வளைத்துப் போட்ட கலைப்புலி தாணு… என்ன திட்டம்னு தெரியலயே?

ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனரை வளைத்துப் போட்ட கலைப்புலி தாணு… என்ன திட்டம்னு தெரியலயே?

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது முதல் படத்துக்குப் பிறகு ரஜினிக்காக கதை தயார் செய்து கூறியிருந்தார்.

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மருமகன். இந்த படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தனக்கும் ஏதாவது ஒரு கதை தயார் செய்யுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

`

அதையடுத்து சரித்திரப் பின்னணியில் ஒரு கதையைத் தயார் செய்த தேசிங் ரஜினியை சந்தித்து கதையை விவரித்ததாக செய்திகள் வெளியானது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் சரித்திரக் காட்சிகளால் பட்ஜெட் எகிறும் என்பதால் ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் தேசிங் பெரியசாமியை அழைத்து அவருக்காக அலுவலகம் அமைத்துக் கொடுத்து திரைக்கதை பணிகளை மேற்கொள்ள சொல்லியுள்ளாராம் தயாரிப்பாளர் தாணு. இதனால் ரஜினி தன் படங்களை முடித்ததும் மீண்டும் இந்த படத்தில் நடிப்பாரா, அல்லது வேறு ஹீரோவுக்காக கதையை மாற்றி வருகிறாரா தேசிங் பெரியசாமி என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

```
```

தாணு மற்றும் ரஜினி ஏற்கனவே கபாலி வெற்றிப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது