Thursday, March 28, 2024
Home > Cinema > குழந்தை பிறப்பு சர்ச்சை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது பாயும் சட்டம் ! அதிரடி பதில் கூறிய அமைச்சர் மா சுப்ரமண்யன்

குழந்தை பிறப்பு சர்ச்சை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது பாயும் சட்டம் ! அதிரடி பதில் கூறிய அமைச்சர் மா சுப்ரமண்யன்

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

`

இந்நிலையில் தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

```
```

இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் ஆகி 5 ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான்கு மாதங்களே ஆன நிலையில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமண்யனிடம் கேள்வி எழுப்பிய போது “இது சம்மந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்” எனக் கூறியுள்ளார். இதனால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு பிரச்சனை எழலாம் என சொல்லப்படுகிறது. இந்திய சினிமாவில் இப்போது பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொண்டு வருகின்றனர்.