இயக்குனர் ராஜு முருகன் ஜிப்ஸி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
பத்திரிக்கையில் பணியாற்றிய எழுத்தாளர் ராஜு முருகன் குக்கூ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்குக் கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவர் ஜீவாவை கதாநாயகனாக்கி இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரமே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் ராஜு முருகனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் ஷூட்டிங் தாமதம் ஆகியுள்ளதாம்.
இந்த படத்தை மொத்தமே 40 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். கார்த்தி மொத்தமாக 30 நாட்கள் இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்கியுள்ளாராம். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.