Monday, May 20, 2024
Home > செய்திகள் > திமுக பிரமுகர் உட்பட நான்குபேருக்கு குண்டாஸ்..!

திமுக பிரமுகர் உட்பட நான்குபேருக்கு குண்டாஸ்..!

15-4-22/13.00PM

விருதுநகர் : விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய திமுக பிரமுகர் உட்பட நான்குபேரை குண்டாசில் கைதுசெய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்தி : ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் #Tennikoit போட்டியில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவர் அபிஷேக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

விருதுநகர் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிய ஹரிகரன், மாடசாமி , ஜுனைத் அஹம்மது,பிரவீன் ஆகியோரை ஏற்கனவே காவல்துறை கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைந்திருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட மேலும் நான்கு சிறுவர்கள் என ராமநாதபுரம் கூர்நோக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

`

பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இந்தவழக்கில் தொடர்புடையவர்கள் மீது புதிதாக ஆறு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டுநாட்கள் விசாரணை மேற்கொண்டது. அடுத்து கைதான எட்டுப்பேரின் வீடுகள் மற்றும் சம்பவம் நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் சிறையில் உள்ள அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி திட்டமிட்டார்.

```
```

மேலும் கைதுசெய்யப்பட்டவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மெமரி கார்டு செல்போன் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் கைதான நான்கு சிறுவர்களுக்கு சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சம்பவத்தில் தொடர்புடைய நான்குபேர் மீதும் குண்டாஸ் போட உத்தரவிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா