மலையாளத்தில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்னா பாலமுரளி. அந்த படத்தின் வெற்றியால் முன்னணி நடிகையானார்.

அதன் பின்னர் தமிழில் சர்வம் தாளமயம், சூரரைப் போற்று மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சூரரைப் போற்று திரைப்படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. அந்த படத்துக்கு 6க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் கிடைத்தன.

இதுவரை ஹோம்லி கதாபாத்திரங்களாகவே நடித்து வந்த அபர்னா பாலமுரளி, இப்போது கிளாமராக வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வெள்ளை உடையில் மெழுகு டால் போல இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள சட்டக்கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அவர் சென்றிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் மாணவர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் வந்தார். அது மட்டும் இல்லாமல் அநாகரிகமாக அவர் தோல் மேல் கைபோட முயன்றார். அவரிடம் இருந்து விலகிக்கொண்டார் அபர்ணா. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆனது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவரை சட்டக்கல்லூரி 7 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. இந்த சம்பவம் பற்றி பேசிய அபர்ணா “மனிதர்கள் பொதுவெளியில் நாகரிகத்தைக் கடைபிடிப்பது நல்லது. அவர் மேல் நான் எதுவும் புகார் கொடுக்கவில்லை. சட்டக்கல்லூரி எடுத்த நடவடிக்கையே போதுமானது” எனக் கூறியுள்ளார்.
