ஐஸ்வர்யா தத்தா நிருத்யங்கன் சகோதரிகள் என்ற குழுவில் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் கவனம் ஈர்த்தார். பின்னர் அவர் மாடலிங்கில் இறங்கினார், மேலும் சோனி மியூசிக் வீடியோக்களுக்காக பின்னணி பாடகர் ஹர்ஷத் சக்சேனாவுடன் விளம்பரங்கள் மற்றும் மியூசிக் வீடியோவில் தோன்றினார்.

இதையடுத்து ராம்குமார் ராயப்பன் இயக்கிய தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா ஒரு நடுத்தரக் கல்லூரி மாணவியாக நடித்தார், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நகுல் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பின்னர் அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் 2015 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகைகளில் ஒருவராக, அமிரா தஸ்தூர் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்றவர்களுடன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்படியான சிறப்பான அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து வாய்ப்புகளைக் குவிக்க முடியவில்லை.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய அவர் அதில் கவனிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் யாஷிகா ஆனந்தும் இணைபிரியா தோழிகளாக வலம் வந்தனர். ஆனால் இருவருமே டைட்டில் பட்டத்தை வெல்லவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தபின்னர் அவருக்கு பெரியளவில் சினிமா வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்புகளைக் குவிக்க, அவர் இன்ஸ்டாகிராமில் கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

