என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாளில் ஓஹோவெனப் புகழடைந்தார். அதன் பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
