தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா மணி.

தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.

அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, பருத்தி வீரன் திரைப்படம். அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆனாலும் அவரால் உச்ச நட்சத்திரம் ஆக முடியவில்லை.

அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் நடித்த அவருக்கு பேமிலி மேன் தொடரின் மூலம் இந்தியா முழுவதும் நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

இப்போது வெப் சீரிஸ்களில் நடித்து வரும் பிரியா மணி உடல் எடையைக் குறைத்து இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

