தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல், இசை என பலதுறைகளில் தனித்தன்மையோடு செயல்பட்டு வருபவர் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.
சினிமாவில் 15 ஆண்டுகளாக நடித்து வரும் ஆண்ட்ரியா துணிச்சலான மற்றும் சமூகக் கருத்துள்ள படங்களில் நடித்து வெகுசன ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அப்படி அவர் தன் உடல் அழகை வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கிளா மரான உடை போட்டோ கவனத்தைப் பெற்றுள்ளது.

