2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

ஆனால் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது பின்னர் வந்த இரண்டு படங்கள்தான். முதலில் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும், அவர் இடம்பெற்ற வாழமீனு பாடல் தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டது. அந்த பாடலின் வெற்றியால் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு அவரை மேலும் பிரபலம் ஆக்கியது திருட்டுப் பயலே திரைப்படம். அந்த படத்திலும் அவர் கதாநாயகி இல்லை. திருட்டு பயலே படத்தில் திருமணத்துக்குப் பின்னர் வேறொருவருடன் உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது.

அதன்பின்னர் கிளா மர் வேடங்கள், ஒரு பாடலுக்கு ஆடுவது என நன்றாக கல்லா கட்டினார். பல படங்களில் அப்படி தோன்றிய அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

அதன் பிறகு சினிமா ரசிகர்கள் அவரைக் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாக மீண்டும் ரி எண்ட்ரி கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளா மரோடும் திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தீவு ஒன்றில் கடலுக்கு அருகே மாடர்ன் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
