சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த சீரியல் முடித்த பிறகுநடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து.

ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.பின்னர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிப் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்திலும் நடித்தார்.இவர் விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார்.ஆனால் இவர் நடிக்க காட்சிகள் இடம்பெறவில்லை.

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பிக்பாஸ் கவின் நடிக்கும் ஊர் குருவி படத்தில் நடிக்க உள்ளார்.இதையடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து ரேக்ளா படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் தனது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு மின்னும் சேலையில் அவர் எடுத்துள்ள பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

