Friday, May 17, 2024
Home > Cinema > வாடிவாசல்-ஐ கண்டுக்காம ஜெய்பீம் இயக்குனர் படத்தில் நடிக்கும் சூர்யா!

வாடிவாசல்-ஐ கண்டுக்காம ஜெய்பீம் இயக்குனர் படத்தில் நடிக்கும் சூர்யா!

சூர்யா தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

`

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

```
```

இந்த படத்தை முடித்ததும் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட வணங்கான் படத்தையும், அதன் பிறகு வாடிவாசல் திரைப்படத்தையும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சூர்யா ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக ஞானவேல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய படங்களின் இயக்குனர் ரவிக்குமாரும் சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.