சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நாடகமான நாதஸ்வரம் மூலம் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா.
இந்த சீரியல் மூலம் பிரபலமான அவர் தொடர்ச்சியாக கல்யாணப்பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் குடிகொண்டுள்ளார்.
பெரும்பாலும் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் இவர் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் நேற்றுக்கு முந்தைய தினம் ஆன ஆகஸ்ட் இரண்டாம் தேதி மாரடைப்பால் இவருடைய கணவர் உயிரிழந்தார் . இவர் ஒரு பாடி பில்டராக இருந்துள்ளார்.
தினமும் உடல்பயிற்சி செய்துவந்த இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
கடந்த 2022-ல் மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ள இவரது கணவர் திடீரென உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மேலும் இவரது இறப்பு அவரது குடும்பத்தினை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே மாதம் தான் இவர்கள் இருவரும் முதலாவது திருமண நாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி இருந்தனர்.
அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். நேற்றுக்கு முந்தைய தினம் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமான ஒரே வருடத்தில் காதல் கணவரை பறிகொடுத்த நிற்கும் ஸ்ருதிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றார்கள்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி தனது கணவரோடு இருக்கும் அழகிய புகைப்படங்கள் ஆனது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.