ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார்.

இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்த இவர் இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, இப்போது மீண்டும் கார்த்தியோடு இணைய உள்ளார்.

கார்த்தி இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களைக் கவர்ந்து வரும் ராஷ்மிகா சமிபத்தில் மாலத்தீவுகள் கடற்கரையில் எடுத்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆகியுள்ளார்.




