நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை.
இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது.
பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வடிவேலு அந்த படத்தில் மீண்டும் நடிக்க மறுத்தார். இதையடுத்து இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இதில் முதலில் நாய்சேகர் திரைப்படம்தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.