மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் . அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார். இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.

கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

சில ஆண்டுகள் குடும்பத்துடன் செலவிட்ட மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கினார். துவங்கிய சில மாதங்களிலேயே வைரல் ஆனார் மீரா ஜாஸ்மின்.

இந்த வயதிலும் சற்றே கில் மாவன புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின். இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.
