Friday, May 17, 2024
Home > Cinema > மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன?

நடிகர் போண்டா மணி சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக அங்கம் வகித்து பல படங்களில் வடிவேலுவோடு இணைந்து நடித்துள்ளார்.

`

சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழுந்துள்ளதாகவ்ய்ம், அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் தகவல்கள் பரவின.

```
```

அவரை மருத்துவமனையில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சென்று சந்தித்து பேசி ஆறுதல் அளித்தார். அதுபோல நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சங்கம் சார்பாக மனோபாலா ஆகியோரும் சந்தித்து நிதியுதவி அளித்தனர்.

இந்நிலையில் இப்போது போண்டாமணியிடம் மருத்துவமனையில் நட்பாக பழகி அவரின் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு மருந்து வாங்குவதாக சென்ற ராஜேஷ் என்ற நபர் ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதனையடுத்து போண்டாமணி சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளனர்.