Monday, May 20, 2024
Home > Cinema > #32yearsofchiyaanvikram – ‘எல்லாம் உங்களாலதான்’… விக்ரம் நெகிழ்ச்சி டிவீட்!

#32yearsofchiyaanvikram – ‘எல்லாம் உங்களாலதான்’… விக்ரம் நெகிழ்ச்சி டிவீட்!

நடிகர் விக்ரம் தன்னுடைய சினிமா வாழ்வில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. நீண்ட நாட்களாக வெற்றிப்படத்துக்காக காத்திருந்த விக்ரம்முக்கு இந்த படம் அந்த குறையைப் போக்கியுள்ளது.

`

விக்ரம்மின் சினிமா வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டங்களோடுதான் தொடங்கியது. 90 களின் தொடக்கத்திலேயே நடிக்க தொடங்கிவிட்டாலும், விக்ரம்முக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்த சேது வெளியானது 1999ல் தான். அதுவரை நடிப்பு, டப்பிங், மலையாள படங்களில் சிறு வேடங்கள் என கிடைத்த அத்தனையும் பயன்படுத்திக் கொண்டார்.

```
```

சேதுவில் கிடைத்த வெற்றியை அடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த விக்ரம் முன்னணி நடிகரானார். ஆனால் அந்நியன் படத்துக்குப் பிறகு அவரால் அனைவரும் ரசிக்கும்படியான ஒரு ஹிட் படத்தை நீண்டகாலமாக கொடுக்கமுடியவில்லை. இத்தனைக்கும் தன்னை வருத்திக் கொண்டு பல படங்களில் அவர் நடித்திருந்தார். இப்போது அந்த குறையை பொன்னியின் செல்வன் போக்கியுள்ளது.

அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக ஆந்திராவில் இருக்கும் விக்ரம் 32 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து “ இத்தனை வருடங்கள். அத்தனைக் கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சியாக மட்டுமே இருந்திருக்கும். இந்த 32 வருடத்துக்கு நன்றி” என ட்வீட் செய்துள்ளார்.