கடந்த 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.இவர் 1986 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின் இவருக்கு 16 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான”நம்மல்” படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.பின் 2006 ஆண்டு தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் “வெயில்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து “தீபாவளி”, “ஜெயம் கொண்டான்” மற்றும்”அசல்” போன்ற படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான நவின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தொழிலதிபர் மற்றும் கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் அரசாங்கம் சார்பாக பாவனாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது . அப்போது இவர் அணிதிருந்த ஆடை சிறு துண்டு போல இருந்தது மேலும் இவர் கையை தூக்கும்போது ஆடை மொத்தமாக விலகியது.

இதை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரப்பவே . பலரும் பாவனாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் மன வருத்தமடைந்த பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் அதில்
எனக்கானவர்கள் யாரும் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பவும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது, இப்படியான சிலர் அவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சிக்கின்றனர்.

நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் இருளுக்குள் தள்ளுவதை உணர்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகின்றனர் என்றால், நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்றுள்ளார்.
மேலும் என்னை விமர்சிப்பவர்கள் நான் உள்ளே எதுவும் போடவில்லை என்று கூறுகின்றனர் அது உண்மை அல்ல நான் தோல் நிறத்தில் ஆடை அணிதிருந்ததால் அது அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.