Sunday, May 12, 2024
Home > Cinema > சின்ன கல்லு பெத்த லாபம் பார்க்க ஆசைப்படும் நயன்தாரா… பிரபல பத்திரிக்கையாளர் ஆதங்கம்!

சின்ன கல்லு பெத்த லாபம் பார்க்க ஆசைப்படும் நயன்தாரா… பிரபல பத்திரிக்கையாளர் ஆதங்கம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதையடுத்து அவர்கள் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

`

இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் ஆகி 5 ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான்கு மாதங்களே ஆன நிலையில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விசாரணை நடத்தி அளிக்கும் தகவலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

```
```

திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் இறங்கு முகமாக உள்ளது. இதுபற்றி பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளரும், தயாரிப்பாளருமான அந்தனன் “நயன்தாரா சிறிய பட்ஜெட்டில் தரம் குறைவான படத்தை எடுத்து அதை ஓடிடியில் விற்று லாபம் பார்க்கலாம் என நினைக்கிறார். இதனால்தான் அவரின் மார்க்கெட் சறுக்குகிறது. எப்படியாவது கல்லாவை கட்டினால் போதும் என நினைக்கிறார்” என விமர்சித்துள்ளார்.