இன்றைய இளம் நடிகைகள்தான் இன்ஸ்டாகிராமில் ட்ரண்ட் ஆகி வருகிறார்கள் என்றால் ரிட்டையர் ஆன நடிகைகளும் அங்குதான் குடியேறி எந்நேரமும் புகைப்படங்களாக போட்டு வருகின்றனர். அந்தவகையில் முன்னணியில் இருப்பவர்தான் கிரண்.
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.
அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.
இத்தனைக்கும் கிரணுக்கு அறிமுகப் படமே வெற்றிப்படமாகதான் அமைந்தது. முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படம் மூலமாக இயக்குனர் சரண் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பம் முதலே கிரணுக்கு கிளாமர் ரோல்கள்தான் அதிகளவில் வந்தன. விதிவிலக்காக அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் அமைந்தன. ஆனால் அவர் கிளாமர் ரோல்களை அதிகளவில் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வேடங்களும் அவருக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இதனால் ஓரம்கட்டப்பட்ட அவர் பிறகு அம்மா மற்றும் அண்ணி வேடங்களுக்கு தள்ளப்பட்டார். இப்போது சில ஆண்டுகளாக அந்த மாதிரி வேடங்களும் அவருக்கு இல்லை.
இப்போது அவர் மாடர்ன் ட்ரஸ் அணிந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.