நடிகை திரிஷா சமீபத்தில் தவறி விழுந்ததால் அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக சொலல்ப்படுகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கனவுக்கண்ணியாக வலம் வருபவர் திரிஷா. லேசா லேசா படம் மூலமாக அறிமுகமான அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. விஜய் 67 படத்தில் கூட அவர்தான் கதாநாயகி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் கலந்துகொண்ட அவர் சரியாக நடக்க முடியாமல் அவதிப் பட்டுள்ளார். இதற்குக் காரணம் அவர் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு பிரச்சனைதான் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்ற போது அவருக்கு காலில் அடிபட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.